Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் புரட்டாசி விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புரட்டாசி மாதம் என்பதால் பெருமாளுக்காக பக்தர்கள் விரதமிருந்து வருகிறார்கள். இதனால் குமாரபாளையம் பகுதியில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது, சில நாட்கள் முன்பு விநாயகர் சதுர்த்தி வந்தது. இதில் ஐந்து நாட்கள் வரை தங்கள் பகுதியில் விநாயகர் கொலு வைத்து, பக்தர்கள் பெருமளவில் விரதம் இருந்ததால் இறைச்சி வியாபாரம் பாதிக்கப்பட்டது.
இப்போது புரட்டாசி பிறந்து பெருமாளுக்கு விரதம் இருக்க தொடங்கியதால், இந்த மாதம் முழுதும் போதிய வியாபாரம் இல்லாத நிலை ஏற்படும். இதனால் இறைச்சி கடையையே நம்பி வாழும் வியாபாரிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.